திருவையாறில் பெயர் பலகை மாற்றம்: மக்கள் அவதி

திருவையாறில் பெயர் பலகை மாற்றம்: மக்கள் அவதி

கோப்பு படம் 

திருவையாறில் பெயர் பலகை மாற்றம் செய்யப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளகினர்.

திருவையாறு தேரடி பகுதியில் நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலை திசைகாட்டும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத் தில் கும்பகோணம், அரியலுார் சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலைகள் திசைகாட்டும் பலகை கடந்த மாதம் நடந்த ஐய்யாறப்பர் கோயில் தேர் திருவிழாவை ஒட்டி தேரோட்டம் நடத்துவதற்கு ஏதுவாக இடைஞ்சலின்றி திருப்பி வைக்கப்பட்டது.

விழா முடிந்து 15 நாட்களுக்கு மேலாகியும் சரியான திசைக்கு மாற்றி வைக்கப்படவில்லை. கும்பகோணம் சாலை என்பது ஐயாறப்பர் கோயில் திசையை பார்த்து உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைதுறையினர் உடனடியாக திசைகாட்டும் பலகையை சரியான திசைக்கு மாற் றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story