நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ நிகழ்ச்சி - எம்எல்ஏ பங்கேற்பு

நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ நிகழ்ச்சி - எம்எல்ஏ பங்கேற்பு
நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ நிகழ்ச்சி, எம்எல்ஏ பங்கேற்பு
ஈசூர், சிறுமயிலூர், நெற்குணம்,புளியணி ஆகிய ஊராட்சிகளில் நம்ம ஊரில் நம்ம எம் எல் ஏ நிகழ்ச்சி செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு பங்கேற்றார்

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈசூர், சிறுமயிலூர், நெற்குணம்,புளியணி ஆகிய ஊராட்சிகளில் 'நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ' நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், விசிக கட்சியின் செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை மகளிர் உரிமைத் தொகை ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் கோட்டாட்சியர் தியாகராஜன், வட்டாட்சியர் சரவணன், விசிக கட்சி மாவட்ட செயலாளர் தமிழினி, முன்னாள் மாவட்ட செயலாளர் சூ.ஆதவன், திமுக ஒன்றிய செயலாளர் சிற்றரசு, மாவட்ட கவுன்சிலர்கள் சாந்திரவிகுமார், டைகர்குணா, துணை பெரும் தலைவர் பிரேமாசங்கர், ஈசூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, சிறுமைலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராம், நெற்குணம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி ராமலிங்கம், புளியணி ஊராட்சி மன்ற தலைவர் மலர்சங்கர், விசிக கட்சி ஒன்றிய கவுன்சிலர் சிம்பு, விசிக கட்சி ஒன்றிய செயலாளர்கள் தமிழ்விரும்பி, புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story