செய்யூரில் நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏநிகழ்ச்சி: அதிகாரிகள் பங்கேற்பு

செய்யூரில் நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏநிகழ்ச்சி: அதிகாரிகள் பங்கேற்பு
நம்ம ஊரில் நம்ம எம். எல். ஏ. , நிகழ்ச்சி அதிகாரிகள் பங்கேற்பு
செய்யூரில் நம்ம ஊரில் நம்ம எம். எல். ஏ. , நிகழ்ச்சியில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், செய்யூர் எம்எல்ஏ பாபு தலைமையில், இந்த நிகழ்ச்சி, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது.

நிகழ்ச்சியில், பட்டா, முதியோர் உதவித்தொகை, நுாலகம், பேருந்து நிறுத்தம் அமைத்தல், மேல்நிலை தேக்கத் தொட்டி, குடிநீர் சுத்திகரிப்பு போன்ற பல்வேறு மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

இதையடுத்து, அதன் ஆலோசனைக் கூட்டம், நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது, இதில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இதில், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், செய்யூர் வட்டாட்சியர் சரவணன், செங்கல்பட்டு வேளாண் இணை இயக்குனர் அசோக், மின்சாரத்துறை செயற்பொறியாளர் செந்தாமரை, மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் சிவசக்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்..

Tags

Next Story