மாணவர்களுக்கு உதவும் நான் முதல்வன் திட்டம்: ஆட்சியர் தகவல்

மாணவர்களுக்கு உதவும் நான் முதல்வன் திட்டம்: ஆட்சியர் தகவல்

ஆட்சியர்

தமிழக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் பயிற்சி பெற நான் முதல்வன் திட்டம் உதவுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கூறினார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற "நான் முதல்வன்” கல்லூரி கனவு - 2024 நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அருணா தொடங்கி வைத்து மாணவ மாணவிகளிடம் பேசியதாவது:- நீலகிரி மாவட்டத்தில், பள்ளி படிப்பு முடித்து உயர்கல்வி பயிலவுள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்தும்,

பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பலவகையான விவர ஆலோசனைகள் வழங்குவதற்காக ‘நான் முதல்வன்” திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு படிப்புகள் குறித்து அவ்வப்போதைய சமீபத்திய தகவல்களையும்,

தொழில் துறைகளுக்குத் தேவையான குறிப்பிட்ட திறன்கள் தொடர்பான தகவல்கள் குறித்தும், கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து விவரங்களையும் வழங்குவதே ‘நான் முதல்வன்' திட்டத்தின் நோக்கமாகும். இது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கை இலட்சியங்களை அடையும் வகையில், தங்களுக்கு விருப்பமான துறையில் பயிற்சி பெற உதவுகிறது. தொழில்துறையில் தற்போதுள்ள பணியிட இடைவெளிகளை நிரப்பக்கூடிய திறன் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கும் வகையில் பல்வேறு திறன் பயிற்சிகளை அவர்களுக்கு அளிப்பதற்கான ஆற்றல்மிகு பயிற்றுனர்களை அடையாளம் காண்பதும் இந்த திட்டத்தின் குறிக்கோளாகும். இந்த முதன்மை திட்டத்தின் மூலமாக மாணவர்கள் பயிற்சி பெற முடியும். தங்களுடைய திறன்களுக்கு ஏற்ப அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதையும் இந்த திட்டம் உறுதி செய்கிறது. மாநில கல்வி நிறுவனங்களில், மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள். இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி நல்ல முறையில் உயர்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி,

ஊட்டி அரசு கலைக்கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, ‘நான் முதல்வன் - கல்லூரி கனவு” குறித்த கையேடுகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இதில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கவுசிக், மாவட்ட வன அலுவலர் (பயிற்சி) அரவிந்த், உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், கூடலூர் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், முதன்மை கல்வி அலுவலர் கீதா, உள்பட பலர் கலந்து கொண்டனர். ....

Tags

Next Story