போதை மாத்திரை விற்றவர்கள் கைது - 800 மாத்திரைகள் பறிமுதல்

போதை மாத்திரை விற்றவர்கள் கைது - 800 மாத்திரைகள் பறிமுதல்

பைல் படம் 

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 800 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மெயின்காா்டுகேட் அருகேயுள்ள மதுரை சாலையில் போதை மாத்திரைகள் விற்பதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில், கோட்டை போலீஸாா் குறிப்பிட்ட பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரைப் பிடித்து நடத்திய சோதனையில் அவா்களிடம் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள் மதுரை சாலை நத்தா்ஷா பள்ளிவாசல் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த மா. ஜமீா் பாட்சா (21), மதுரை சாலை வள்ளுவா் நகரைச் சோ்ந்த கா. காதா் மைதீன் (21) என்பதும், போதை மாத்திரைகளை விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து, 800 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

Tags

Next Story