நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நரேந்திர மோடி காணாமல் போவது உறுதி அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நரேந்திர மோடி காணாமல் போவது உறுதி அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

செஞ்சி மஸ்தான் பேட்டி 

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நரேந்திர மோடி காணாமல் போவது உறுதி அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நரேந்திர மோடி காணாமல் போவது உறுதி அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி மதுரை பசுமலையில் உள்ள கோபாலசாமி மண்டபத்தில் இன்று திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக நம்மில் ஒருவர் நமக்கான தலைவர் மு.க.ஸ்டாலின் என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறுபான்மையர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் மதுரை,தேனி,சிவகங்கை ராமநாதபுரம்,திண்டுக்கல் போன்ற மாவட்டத்தில் இருந்து வந்த சிறுபான்மை அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அமைச்சரிடம் கொடுத்தனர்‌. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில்; வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சி காணாமல் போய்விடும் தேடிப் பார்த்தாலும் கிடைக்காது என்று பிரதமர் மோடி கூறியது குறித்த கேள்விக்கு நூறாண்டுகளாக தமிழ்நாட்டையும் ஜனநாயகத்தையும் கட்டிக் காக்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். திராவிட மாடலாட்சியில் எல்லோருக்கும் எல்லாமே கிடைக்க வேண்டும் என்பதுதான் உரிமைகளை பாதுகாப்பதில் திராவிட கழகம் நிலைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் அழிந்து போவது உறுதி அதேபோல் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களை திராவிட முன்னேற்ற கழகம் என்றைக்கு எப்போதும் காணாமல் போகாது இந்த இயக்கம் கொள்கை உள்ள இயக்கம் ஆனால் கொள்கைக்கு அப்பாற்பட்டு பிஜேபிக்கு அடிமையா இருக்கிற பாசிசத்தின் அடிமையாக இருக்கிற மோடி அவர்களே நீங்கள் தான் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காணாமல் போவது உறுதி உறுதி என்று சொல்கிறேன் என்றார்.

Tags

Next Story