நத்தம் பேரூராட்சி மன்ற கூட்டம் !

நத்தம் பேரூராட்சி மன்ற கூட்டம் !

நத்தம் நகராட்சி கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சி மன்றத்தின் கூட்டம் நடைபெற்றது. நத்தம் பேரூராட்சி கூட்டம் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சி மன்றத்தின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார். அனைவரையும் செயல் அலுவலர் சின்னசாமி வரவேற்றார். தலைமை எழுத்தர் பிரசாத் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் 15வது நிதிக்குழு திட்டத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் வளமீட்பு பூங்கா சுற்றுச்சுவர் கட்டும் பணி, ஆழ்குழாய் மற்றும் பைப் லைன் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் வசந்த சுஜாதா, கலாவதி, லதா, ராதிகா, சிவா, ராமு, மாரிமுத்து, உமா மகேஸ்வரி, சுமதி, பழனிக்குமார், விஜயவீரன் உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இளநிலை உதவியாளர் அழகர்சாமி நன்றி கூறினார்.

Tags

Next Story