தேசிய விருது பெற்ற பெண் கார் ஓட்டுனர் ஆதரவின்றி தவிப்பு

தேசிய விருது பெற்ற பெண் கார் ஓட்டுனர் ஆதரவின்றி தவிப்பு
X

குமாரபாளையத்தில் தேசிய விருது பெற்ற பெண் கார் ஓட்டுனர் ஆதரவின்றி தவித்து வருகிறார்.

குமாரபாளையத்தில் தேசிய விருது பெற்ற பெண் கார் ஓட்டுனர் ஆதரவின்றி தவித்து வருகிறார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் செல்வி, 38. இவருக்கு ஹரிகாஸ்ரீ, 13, விகாஸ்ரீ, ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். மைசூரில் வாழ்ந்து வந்த நிலையில், பெற்றோர்கள் இறந்நிலையில், உறவினர்கள் இவரை மைசூரில் உள்ள கொடநாடி சேவா ஆதரவற்றோர் மையத்தில் சேர்த்தனர். அங்கேயே வளர்ந்து, கார் ஓட்டுனர் பயிற்சி பெற்றார். ஒரு கட்டத்தில் தற்காலிக ஓட்டுனர் பணி செய்ய துவங்கினார். பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் ஒட்டி, எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி உள்ளார். ஆதரவற்றோர் மையம் சார்பில் டாக்ஸி ஓட்டுனர் பணியில் சேர்ந்தார். இதனால் தேசிய அளவிலான முதல் டாக்சி ஓட்டுனர் நடந்த விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இவருக்கு இந்த விருது வழங்கி பாராட்டினார். இவருடன் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பலரும் விருது பெற்றனர். இவர் ஆதரவற்றோர் மையம் சார்பில் திருமணம் செய்து கொண்டு குமாரபாளையம் வந்தார். இவரது கணவர் சரக்கு வாகனம் ஓட்டி வந்தார். இரு குழந்தைகள் பிறந்த பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்தனர். தற்போது எவ்வித ஆதரவும் இல்லாமல் தவித்து வருகிறார். தற்காலிக கார் ஓட்டுனர் பணி செய்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். இவருக்கு அரசு சார்பில் ஏதாவது ஒரு அரசு பணி கிடைத்தால் தன் குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வந்து விடுவார். தேசிய விருது பெற்ற ஒரு பெண், எந்த ஆதரவும் இல்லாமல் தவித்து வருவது குறித்து மாவட்ட ஆட்சியர் கருத்தில் கொண்டு, உரிய நிவாரணம் கிடைக்க இவர் கேட்டுக்கொள்வதுடன், பொதுநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story