மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்றிதழ்

மதுரையில்  ஆரம்ப  சுகாதார  நிலையங்களுக்கு தேசிய தரச்சான்றிதழ்

ஆரம்ப சுகாதார நிலையங்கள் 

மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மேலும் 13 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தெற்குவாசல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இவ்வாய்வினை மேயர் இந்திராணி பொன்வசந்த் பார்வையிட்டார். தேசிய தரச்சான்று திட்டம் (NQAS – National Quality Assurance Standards) ஆனது ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் மேம்பாட்டுக்காக நடத்தப்படும் திட்டமாகும்.

இத்திட்டமானது சுயமதிப்பீடு, மாநில அரசின் மதிப்பீடு மற்றும் ஒன்றிய அரசின் மதிப்பீட்டை தொடர்ந்து சான்று வழங்கப்படும். மதுரை மாநகராட்சி மஸ்தான்பட்டி, முனிச்சாலை, ஆனையூர், அண்ணாத்தோப்பு, திருநகர், செல்லூர் ஆகிய ஆறு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு தேசிய தரச்சான்றிதழ் கடந்த ஆண்டில் வழங்கப் பட்டுள்ளது.

தற்போது தெற்குவாசல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒன்றிய அரசின் பெங்களுரு சுகாதார தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் ஆர்.டி.நிஷாந்த் மற்றும் புதுடெல்லி துணை நர்சிங் கண்காணிப்பாளர் வயலட் சாட்டர்ஜி ஆகியோர் தெற்குவாசல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகம், மருந்துகள் இருப்பு, பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டனர். தேசிய மதிப்பீட்டு குழு தெற்குவாசல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்,

மேற்கொண்ட ஆய்வினை மேயர் இந்திராணி பொன்வசந்த் நேரில் பார்வையிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. 13 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயர் தெரிவித்தார். இந்நிகழ்வில் துணை மேயர் நாகராஜன், சுகாதார குழுத் தலைவர் ஜெயராஜ்,

நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் ஸ்ரீகோதை, மண்டல மருத்துவ அலுவலர்கள் இவாஞ்சலின் மெர்சி, மாமன்ற உறுப்பினர் முத்துமாரி, மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story