தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு விழா!

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக சார்பில் ஏபி முருகானந்தம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து இன்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பாஜகவின் வேட்பாளர் ஏ பி முருகானந்தம் மற்றும் பாமக , தமமுக , ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கூட்டணி கட்சி சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமாணோர் கலந்து கொண்டனர். இதில் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story