காட்பாடியில் தேசிய டெங்கு தினம்

காட்பாடியில் தேசிய டெங்கு தினம்

தேசிய டெங்கு தினம் 

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் பகுதியில் உலக தேசிய டெங்கு தினம் கொண்டாடப்பட்டது.
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் சார்பில் காட்பாடி காந்தி நகர் பகுதியில் உலக தேசிய டெங்கு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் முனுசாமி மாநகர நல அலுவலர் கணேஷ், சுகாதார அலுவலர் சிவக்குமார், பொது சுகாதார மேலாளர் சரவணன் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர், மேலும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.வாகனத்தில் செல்லும் பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Tags

Next Story