நாகையில் பிப்.9 ல் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

நாகையில் பிப்.9 ல் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

 மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் 

நாகையில் பிப்.9 ல் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் துவங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் வருகின்ற 09.02.2024 அன்று அனைத்து 1 முதல் 19 வயது குழந்தைகளுக்கும் 20 முதல் 30 வயதுடைய மகளிருக்கும் அல்பண்டோசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. மேலும் 09.02.2024 அன்று விடுபட்ட அனைவருக்கும் 16.02.2024 அன்று வழங்கப்படுகிறது. 1 முதல் 2 வயது உடையவர்களுக்கு அல்பண்டோசோல் /½ மாத்திரை (200 அப), 2 முதல் 19 வயதுடைய குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய மகளிருக்கு அல்பண்டோசோல் 1 மாத்திரை (400 அப) வழங்கப்படுகிறது.

நமது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் (தொடக்கப்பள்ளி-439, நடுநிலைப்பள்ளி-116, உயர்நிலைப்பள்ளி-67, மேல்நிலைப்பள்ளி-79) மற்றும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், 633 அங்கன்வாடி மையங்கள், 13 பாதுகாப்பு இல்லங்கள் போன்றவற்றில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. 1 முதல் 19 வயதுடைய 2,13,310 குழந்தைகளுக்கும் 20 முதல் 30 வயதுடைய 45,244 மகளிருக்கும் மொத்தம் 2,58,544 நபர்களுக்கு அல்பண்டோசோல் மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமினை அனைவரும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்த ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story