தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் ஆய்வு

தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் ஆய்வு

 தேசிய பேரிடர் மீட்புபடை குழுவினர்

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேசிய பேரிடர் மீட்புபடை குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.
தேசிய பேரிடர் மீட்புபடை குழுவினர் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அவசர கால வழிகள், ஆபத்து காலங்களில் சிகிச்சை அளிக்ககூடிய முறைகள் மற்றும் வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். இதனையடுத்து தீயணைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், அரியலூர் கோட்டாச்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் அரசுதுறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story