சேலத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினம்

சேலத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினம்


சேலம் அய்யந்திருமாளிகை நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் இல்லத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.


சேலம் அய்யந்திருமாளிகை நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் இல்லத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
சேலம் அய்யந்திருமாளிகை நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் இல்லத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இல்ல தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். பெண் குழந்தைகள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர். இல்ல நிறுவன செயலாளர் பெரியசாமி வரவேற்றார். பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இல்ல மாணவி சந்தியா, பெண் குழந்தை உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விடுதி வார்டன் கோமதி, இல்ல கண்காணிப்பாளர் மதன், பாலசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story