சிறப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

X
மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்த மாற்று திறனாளிகள் சிறப்பு முகாமிற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் தினேஷ்குமார், மனநல மருத்துவர் உஷாநந்தினி, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வாசவி, கண் மருத்துவர் காயத்ரி, பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் சக்திவேல் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்தனர் முகாமில் பங்கேற்ற 57 மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
Next Story
