தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிப்பு

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிப்பு

உறுதிமொழி ஏற்பு 

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுகொள்ளப்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (தொழுநோய்) மருத்துவர் ரூபன் ராஜ்,அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சுகந்தி ராஜகுமாரி ஆகியோர் முன்னிலையில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.இதில் பேராசிரியர்கள்,மருத்துவர்கள், அலுவலக ஊழியர்கள்,பணியாளர்கள்,அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள்,தொழுநோய் அலுவலக பணியாளர்கள் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து தொழுநோயால் பாதிப்படைந்து குணமடைந்த ஊனமுற்ற நோயாளிகளுக்கு கல்லூரி முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tags

Next Story