தேசிய அளவிலான கைப்பந்து போட்டி: மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய அளவிலான கைப்பந்து போட்டி:  மாணவிகளுக்கு பாராட்டு
மாணவிக்கு பாராட்டு 
தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு தேர்வான மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்திய பள்ளிகள் குழுமம் சார்பில் 67-வது தேசிய அளவில் 17 வயதுக்குட்டபட்ட மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி திருச்சியில் வருகிற 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கனிஷ்கா, யாமினி, சாதனா ஆகியோர் தமிழக அணிக்கு விளையாட தேர்வு பெற்றனர். இவர்களை போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், பயிற்சியாளர் பரமசிவம் கலந்து கொண்டனர்.

Tags

Next Story