தேசிய நூலக வார விழா - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு.

தேசிய நூலக வார விழா - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு.

புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த ஆட்சியர் 

56 ஆவது, தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, வேலூரில் உள்ள தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி மாவட்ட மைய நூலகத்தில், புத்தக விற்பனையையும் புத்தகக் கண்காட்சியையும் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் இன்று துவக்கி வைத்தார். புத்தக கண்காட்சி ஒரு வார காலம் நடைபெறும் எனவும், புத்தகங்கள் வேண்டுவோர் வேலூரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார். வேலூரில் உள்ள மாவட்ட நூலகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த பல்வேறு புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக அளவில் புத்தகங்கள் தேவை குறித்து மாவட்ட நூலகத்திடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. பட்டியல் வழங்கினால் அதனை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். மேலும் வேலூரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதால் அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் கூறினார்.

Tags

Next Story