உளுந்தூர்பேட்டையில் தேசிய மக்கள் நீதிமன்றம்

உளுந்தூர்பேட்டையில் தேசிய மக்கள் நீதிமன்றம்

மக்கள் நீதிமன்றம் 

கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைப்பெற்றது.
உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது . நீதிபதிகள் விக்னேஷ்பிரபு, இலக்கியா, வழக்கறிஞர்கள், வட்ட சட்ட பணிகள் குழுவினர் பங்கேற்றனர். மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்குகள், குற்றவியல் வழக்குகள் என 37 வழக்குகளுக்கு 2 கோடியே 41 ஆயிரம் ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டது.

Tags

Next Story