தேசிய சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு 

தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மாநகரப் போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் கல்லூரி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாநகர் காவல்துறை சார்பாக காளவாசல் சந்திப்பில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் மதுரை மாவட்ட நேரு யுவகேந்திராவின் சார்பாக தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் குமார் தலைமையில் மதுரை அனுப்பானடி NMR சுப்ரமணியன் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் சுமார் 120 நபர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சிக்னல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது, மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சக மதுரை துணை இயக்குநர் செந்தில்குமார். வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் கல்லூரியின் துணை முதல்வர் மகிமா ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமலைக்குமார், காவல் உதவி ஆணையர்கள் செல்லின் மற்றும் மாரியப்பன். போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story