கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல்  தினம்

அறிவியல் கண்காட்சி

கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம் கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் அவர்கள் பார்வையிட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் மாணவர்களின் பல்வேறு படைப்புகள் இடம் பெற்றன. இந்நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி ஆசிரியர்கள் முரளி,ஜெகராஜ், விமலி, பத்மப்ரியா, ரூபினி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story