அரசுப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம்
குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடடப்பட்டது.
குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடடப்பட்டது.
குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் தலைமையாசிரியை கவுசல்யாமணி தலைமையில் கொண்டாடப்பட்டது. பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அன்பரசன் பங்கேற்று. தேசிய அறிவியல் தினம் ஏன் கொண்டாடுகிறோம்? சர்.சி.வி. ராமனின் ஒழி சிதறல் விளைவு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவர்கள் அறிவியல் பரிசோதனைகள் செய்து காண்பித்தனர். வானவில் மன்ற கருத்தாளர் குணசேகரன் பங்கேற்று, மாணாக்கர்களுக்கு வினாடிவினா போட்டிகள் நடந்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
Next Story