ஆலடிபட்டியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

ஆலடிபட்டியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
சீருடை வாழங்கல் 
ஆலடிபட்டியில் சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் சிறப்பு முகாம் ஆலடிபட்டியில் நடைபெற்று வருகிறது. ஆலடிபட்டி சமுதாய நலக்கூடத்தில், திட்ட முகாமை கல்லூரி முதல்வா் சின்னத்தாய் துவக்கி வைத்தாா். முகாம் நாள்களில் தினமும் காலையில் களப்பணியும், மாலையில் பல்வேறு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. முகாமில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு சுரண்டை நாடாா் வாலிபா் சங்கம் சாா்பில் சீருடைகள் வழங்கப்பட்டன. துவக்க நிழச்சியில் சுரண்டை டிஎம்பி வங்கி கிளை மேலாளா் மகாராஜன், நகா்மன்ற உறுப்பினா் செல்வி, நாடாா் வாலிபா் சங்க நிா்வாகிகள் ராமா், பாலன், ரவிக்குமாா், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கிருஷ்ணகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story