தேசிய கைப்பந்து போட்டி: பதக்கம் பெற்ற மாணவருக்கு பாராட்டு

தேசிய கைப்பந்து போட்டி: பதக்கம் பெற்ற மாணவருக்கு பாராட்டு

குஜராத்தில் நடந்த தேசிய கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தமிழக மாணவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. 

குஜராத்தில் நடந்த தேசிய கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தமிழக மாணவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், தேசிய அளவில் 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி குஜராத் மாநிலம் மெக்ஸ்சானா மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. இதில் தமிழக அணி வெண்கலப்பதக்கம் பெற்றது. இந்த போட்டியில் தமிழக அணி சார்பில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ்குமார் கலந்து கொண்டு விளையாடினார். இதையடுத்து அவருக்கு பாராட்டு விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது. இதற்கு கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி மாணவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ், செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர்கள் ராஜாராம், லாரன்ஸ் பாஸ்கர், பயிற்சியாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story