கெங்கவல்லியில் தேசிய வாக்காளர் தின பேரணி

கெங்கவல்லியில் தேசிய வாக்காளர் தின பேரணி

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

கெங்கவல்லியில் தேசிய வாக்காளர் தின பேரணி நடைபெற்றது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடைபெற் றது. கெங்கவல்லி தேர்தல் துணை தாசில்தார் முருகானந்தம், சமூகநலபாதுகாப்பு 'தனி தாசில்தார் அன்புச்செழியன் ஆகியோர் தலைமையில், கெங்கவல்லி நகரின் முக்கிய வீதிகளில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில்வாக்காளர்கள் ஓட்டுரிமையை 100 சதவி தம் பதிவு செய்யவும்,

ஓட்டுரிமை முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோ கம்செய்யப்பட்டன. இதில் தாசில்தார் பாலாஜி மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும்கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story