பாஜக சார்பில் தேசிய மகளிர் தின பேரணி

பாஜக சார்பில் தேசிய மகளிர் தின பேரணி

பாஜக பேரணி 

காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., மகளிர் அணி சார்பில், தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சக்தியை போற்றுவோம் என்ற பிரசார பேரணி நடைபெற்றது.
மத்திய அரசின் நலத்திட்டங்களை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., மகளிர் அணி சார்பில், தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சக்தியை போற்றுவோம் என்ற பிரசார பேரணி காஞ்சிபுரத்தில் நடந்தது. மாவட்ட மகளிர் அணி தலைவர் ரங்கநாயகி தலைமை வகித்தார். பா.ஜ., மாவட்ட தலைவர் கே.எஸ் பாபு, பிரசார பேரணியை துவக்கி வைத்தார். சர்வதீர்த்தம் குளக்கரை அம்மன் கோவில் அருகில் துவங்கிய பேரணி, சங்கரமடம் அருகில் நிறைவு பெற்றது. இதில், மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்றவர்கள், மத்திய அரசின் நலத்திட்டங்களை விளக்கி கோஷமிட்டபடி அரசின் நலத்திட்டங்களை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்."

Tags

Next Story