தேசிய இளைஞர் தின கொண்டாட்டம்

தேசிய இளைஞர் தின கொண்டாட்டம்

தேசிய இளைஞர் தினம் 

விழுப்புரம் மாவட்டம், ஒரத்தூர் சுவாமி விவேகானந்தா கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா கொண்டாட்டப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் ,ஒரத்தூரில் உள்ள சுவாமி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா, தேசிய இளைஞர் தின விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கெஜலட்சுமி வரவேற்றார். விழுப்புரம் ஸ்ரீராமகி ருஷ்ணா மிஷன் செயலாளர் சுவாமி பரமசுகானந்தர் மகராஜ் கலந் துகொண்டு மாணவர்களுக்கு ஆசியுரை வழங்கினார்.

விழாவில் விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, சுற்று வட்டார பகுதியில் உள்ள 25 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். ஒரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் லதாபிரபு, ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். தமிழ்த்துறை தலைவர் சுமதி, விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதில் ஜெயம் அறக்கட்டளை அறங்காவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் வணிகவியல் துறைத்தலைவர் ஜெரினாபேகம் நன்றி கூறினார்.

Tags

Next Story