நாட்டியாஞ்சலி நிறைவு விழா !

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் 2 நாள் நாட்டியாஞ்சலி நிறைவு விழா

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அங்கங்களான விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, இரபீந்தரநாத் தாகூர் மகளிர் கல்வியில் கல்லூரி, விஸ்வபாரதி மகளிர் கல்வியியல் கல்லூரிகளின் சார்பில் நடைபெற்ற 2 நாள் நாட்டியாஞ்சலி நிறைவு விழா நிறைவு பெற்றது.

நாட்டியாஞ்சலி நிறைவு விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் திருமதி கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ்சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, முதன்மை நிர்வாகிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ, திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் குமாரவேல், முதல்வர்கள் டாக்டர் சுரேஷ்குமார், டாக்டர் ஆரோக்யசாமி, டாக்டர் அழகுசுந்தரம், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன், வேலைவாய்ப்புத் துறை அதிகாரி அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீதி அரசர்களாக சங்ககிரி விவேகானந்தா கல்வி குழுமத்தைச் சார்ந்த மூன்று வல்லுநர்கள் பங்கேற்றனர். இந்த கலாச்சார பெருவிழாவில் விவேகானந்தா கல்வி குழுமத்தின் மூன்று கல்லூரிகளைச் சார்ந்த 2,000 மாணவிகள் பார்வையாளர்களாக பங்கேற்றனர். 100க்கும் மேற்பட்ட மாணவியர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் 15 ஆசிரிய ஆசிரியைகள் கலை நிகழ்ச்சிகள் கலாச்சார பெருவிழாவில் அரங்கேறின. டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் பேராசிரியர்கள் நடத்திய கண்கவர் பேஷன் ஷோ அனைத்து பார்வையாளர்களையும் கவர்ந்தது.

கலாச்சார பெருவிழாவின் சிறந்த நடனத்திற்கான முதல் ஆறு பரிசுகளை விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகளும் நான்கு பரிசுகளை விஸ்வபாரதி கல்வியல் கல்லூரி மற்றும் இரவீந்தரநாத் தாகூர் கல்வியியல் கல்லூரி மாணவிகளும் வென்றனர்.

கலாச்சார பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள் பேராசிரியர் சண்முகப்பிரியா, பேராசிரியர் தனலட்சுமி, டாக்டர் கலைவாணி, டாக்டர் லோகநாயகி, டாக்டர் மைதிலி, டாக்டர் அபிதா, பேராசிரியர் சுகுணா, டாக்டர் பிரபாகரன், டாக்டர் பிரபுகுமார், டாக்டர் மெய்வேல் மற்றும் சங்ககிரி விவேகானந்தா கல்வி குழுமத்தின் ஃபைன் ஆர்ட்ஸ் துறை மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story