தேக்கம்பட்டி ஸ்ரீ தாஸாஞ்சனேயர் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா

தேக்கம்பட்டி ஸ்ரீ தாஸாஞ்சனேயர் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா

தாஸாஞ்சனேயர் கோவில் 

தேக்கம்பட்டி ஸ்ரீ தாஸாஞ்சனேயர் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடந்தது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தாஸாஞ்சனேயர் கோவிலில் நவராத்திரி 10ஆம் நாளை முன்னிட்டு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் தேக்கம்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு நெய்யில் தெரியும் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனை வணங்கி அருள் பெற்று சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமாக சக்கரை பொங்கல், சாம்பார் சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story