கிளாரில் நவராத்திரி விழா - சிறுவர்கள் விளக்குப் பூஜை

கிளாரில் நவராத்திரி விழா - சிறுவர்கள் விளக்குப் பூஜை

திருவிளக்கு பூஜை

காஞ்சிபுரம் ஒன்றியம், கிளார் கிராமத்தில் உள்ள அறம்வளர் நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது

காஞ்சிபுரம் ஒன்றியம், கிளார் கிராமத்தில் அறம்வளர் நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள் விழாவை ஒட்டி நேற்று மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு அறம்வளர்நாயகிக்கும், சிவகாமி சுந்தரி அம்பிகைக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பள்ளி மாணவ- - மாணவியர் அம்பாள் பாராயணம் செய்தனர். விளக்கு பூஜையில், குங்கும அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.




Tags

Next Story