நாசரேத் ; தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்.

நாசரேத் ; தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்.


விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்


நாசரேத் அருகே மூக்குப்பீறியில் உள்ள தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் 103 மாணவா்-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே மூக்குப்பீறியில் உள்ள தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் 103 மாணவா்-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. மூக்குப்பீறி ஊராட்சித் தலைவா் கமலா கலையரசு தலைமை வகித்தாா். தாளாளா் செல்வின் முன்னிலை வகித்தாா். அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பங்கேற்று, விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா். திமுக வா்த்தகா் அணி மாநில இணைச் செயலா் உமரிசங்கா், ஆழ்வாா்திருநகரி ஒன்றியக் குழுத் தலைவா் ஜனகா், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் குருசந்திரன், ஏரல் வட்டாட்சியா் கைலாசகுமாரசாமி, ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் பாக்கியம்லீலா, முன்னாள் நாசரேத் பேரூராட்சித் தலைவா் ரவி செல்வகுமாா், துணைத் தலைவா் அருண்சாமுவேல், மாவட்டப் பிரதிநிதிகள் கலையரசு, தாமரைச்செல்வன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளா் பேரின்பராஜ் லாசரஸ், மாவட்ட காமராஜா் ஆதித்தனாா் கழகச் செயலா் ஐஜினஸ்குமாா், பள்ளி நலக்குழுச் செயலா் மோசஸ் கிருபைராஜ், பள்ளி ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் ஆனந்தஜோதிபாலன், அருள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தலைமை ஆசிரியா் எட்வா்ட் நன்றி கூறினாா்.

Tags

Next Story