மின் மயானம் அருகே தங்கையின் காதலை கைவிட மறுத்ததால் காதலனுக்கு அரிவாள் வெட்டு!

மின் மயானம் அருகே தங்கையின் காதலை கைவிட மறுத்ததால் காதலனுக்கு அரிவாள் வெட்டு!

திருப்பூர் 

திருப்பூர் நொய்யல் ஆறு மின் மயானம் அருகே தங்கையின் காதலை கைவிட மறுத்த காதலனை ஓட ஓட விரட்டி வெட்டினர்.

திருப்பூர் பெரியதோட்டம் 5-வது வீதியை சேர்ந்தவர் அப்பாஸ்.இவரது மகன் அப்துல் அஜீஸ் (வயது 23).இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் பக்ரீத் பண்டிகையை விடுமுறையையொட்டி அப்துல்அஜீஸ் தனது நண்பர்களுடன் கேரளாவுக்கு செல்ல புறப்பட்டு கொண்டிருந்தார்.

அப்போது அவரை தொடர்பு கொண்ட காதலியின் அண்ணன் அப்துல் ரகுமான், எனது தங்கையுடனான காதல் விவகாரம் தொடர்பாக பேச வேண்டும். எனவே திருப்பூர் நொய்யல் ஆறு மின்மயானம் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து அப்துல் அஜீஸ் தனது நண்பருடன் அங்கு சென்றார். அப்போது அப்துல்ரகுமான், எனது தங்கையுடனான காதலை கைவிடுமாறு அப்துல்அஜீசிடம் வலியுறுத்தி உளளார்.

இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அப்துல்ரகுமான் மற்றும் அவரது நண்பர்கள் 3பேர் சேர்ந்து அப்துல்அஜீசை அரிவாளால் சரமாரி வெட்டினர். மேலும் பீர்பாட்டிலால் குத்தினர். அவர்களிடம் இருந்து அப்துல் அஜீஸ் தப்பியோட முயன்றார். இருப்பினும் ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் அப்துல் அஜீசின் தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. மேலும் அதனை தடுக்க முயன்ற நண்பர் ஒருவருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் வரவே அப்துல்ரகுமான் தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பிேயாடினார். காயமடைந்த அப்துல்அஜீசை நண்பர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்துல் அஜீஸ்க்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story