நாங்குநேரி அருகே ரூ. 1.27 கோடி - போலீசார் விசாரணை

நாங்குநேரி அருகே ரூ. 1.27 கோடி - போலீசார் விசாரணை

காவல் நிலையம் 

நாங்குநேரி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் இரண்டு கார்களில் எடுத்து வரப்பட்ட ரூ.1.27 கோடியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அடுத்தடுத்து வந்த இரண்டு கார்களில் சோதனை மேற்கொண்ட பொழுது 1.27 கோடி ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து நாங்குநேரி போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர் கார் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story