ராசிபுரம் அருகே மின் கசிவால் கூரை வீடு எரிந்து நாசம்

ராசிபுரம் அருகே மின் கசிவால் கூரை வீடு எரிந்து நாசம்
தீ விபத்து 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டணாச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 69; கூலித் தொழிலாளி. கூரை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், பாலகிருஷ்ணன் வேலைக்கு சென்ற நிலையில், மின்கசிவு காரணமாக கூரை வீடு தீ பிடித்தது. மேற்கூரை நீல கலர் பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி இருந்தது. இதில் பற்றிய தீ மளமளவென பரவி கூரை முழுவதும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை முழுவதும் அணைத்தனர். இவ்விபத்தில் டிவி, அடுப்பு, துணி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் வரை இருக்கும் என பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story