சங்கராபுரம் அருகே கூரை வீடு எரிந்து சேதம்

சங்கராபுரம் அருகே கூரை வீடு எரிந்து சேதம்

சங்கராபுரம் அருகே கூரை வீடு எரிந்து சேதம்

சங்கராபுரம் அருகே கூரை வீடு தீ பிடித்து எரிந்ததில் வீட்டு உபயோக பொருட்களுடன் நகை மற்றும் பணம் சேதமானது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
சங்கராபுரம் அருகே கூரை வீடு தீ பிடித்து எரிந்ததில் வீட்டு உபயோக பொருட்களுடன் 8 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் சேதமானது. சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 38; விவசாயி. இவர் சோழம்பட்டு கூட்ரோடில் கூரை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் திடீரென வீடு தீ பிடித்து எரிந்தது. இதனால், அலறியடித்தபடி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த 8 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் உட்பட பொருட்கள் முழுதும் சேதமானது. புகாரின் பேரில், தீ விபத்துக்கான காரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story