திருமருகல் அருகே மனைவியை கொலை செய்து உடலை எரித்த கணவர் கைது

திருமருகல் அருகே   மனைவியை கொலை செய்து உடலை எரித்த கணவர் கைது

மனைவியை கொலை செய்தவர்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே மனைவியை கொலை செய்து உடலை எரித்த கணவர் கைது

நாகை மாவட்டம் திருமருகல் அருகே மனைவியை கொலை செய்து உடலை எரித்த கணவர் கைது நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி இளங்குடியான் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் மனோகரன் (வயது 59).இவர் மனைவி அமுதா (வயது 55).இருவருக்கும் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இருவரும் திருமணம் ஆகி சென்னையில் உள்ளனர்.இந்த நிலையில் மனோகரன் அமுதா இடையே சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி அதேபோல் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரம் அடைந்த மனோகரன் அமுதாவை மின்சார ஒயரால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் உடலை கேஸ் சிலிண்டரின் குழாயை அமுதாவின் உடலில் கட்டி வைத்து கொளுத்தி விட்டு வீட்டை விட்டு தப்பி சென்றுள்ளார்.இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் திருக்கண்ணபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பெயரில் நாகூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார்,திருக்கண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த அமுதாவின் உடலை கைப்பற்றி நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து மகன் சாம்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மனோகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story