திருமருகல் அருகே வயலில் தீப்பற்றி எரிந்ததில் 27ஆட்டுக் குட்டிகள் பலி

திருமருகல் அருகே  வயலில் தீப்பற்றி எரிந்ததில்  27ஆட்டுக் குட்டிகள் பலி

தீயில் கருகிய ஆட்டுக்குட்டி

நாகை மாவட்டம் திருமருகல் அருகே வயலில் தீப்பற்றி எரிந்ததில் 27ஆட்டுக் குட்டிகள் பலியானது.

நாகை மாவட்டம் திருமருகல் அருகே வயலில் தீப்பற்றி எரிந்ததில் 27 - ஆட்டுக் குட்டிகள் பலி நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் முருகராஜ் (வயது 38).இவர் சுமார் 150 செம்மறி ஆடுகளை மேய்த்து வளர்த்து வருகிறார்.

நேற்று காலைபோலகம்-மானாம்பேட்டை ஆற்றங்கரை ரோடு சாலை ஒரம் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு குட்டிகளை வயல் நடுவில் கூடையில் அடைத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் வயலில் மதியம் 3 மணி அளவில் வயல் வெளியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் செம்மறி ஆட்டு இளம்குட்டி கூடைகளில் கவிழ்த்து வைத்திருந்த 27 ஆட்டுக்குட்டிகள் தீயில் கறுகி பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து தகவல் அறிந்த திருமருகல் தீயணைப்பு நிலையம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஓஎன்ஜிசி தீயணைப்பு வாகனம் தீயணைக்க முயற்சித்தது.ஆனால் தீயை அணைப்பதற்குள் தீயில் கருகி 27 ஆட்டுக்குட்டிகள் மற்றும் சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்து சேதமானது.

Tags

Next Story