தர்மபுரியில் நீங்கள் நலமா திட்டம் துவக்கம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் நீங்கள் நலமா திட்டம் மூலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு திட்ட பயனாளிகளிடம் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பயனாளிகளைத் தொடர்பு கொண்டு நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறியும் புதுமையான திட்டம் நீங்கள் நலமா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். திட்டத்தை அறிவிப்பதோடு கடமை முடிந்துவிடுவதில்லை. அது எந்த நோக்கத்துக்காக அறிவிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேற்றுப்பட்டு வருகிறதா என்பதுதான் முக்கியம் என்று முதல்வர் கூறினார். இந்த நிலையில் இன்று 06 - 03 - 2024 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் அவர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பயனாளிகளிடம் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார்கள். நிகழ்வில் துறை சார்ந்த மாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story