திருப்பூர் மாவட்டத்தில் நீங்கள் நலமா திட்டம் துவக்கம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நீங்கள் நலமா திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு. பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் ஊத்துக்குளியில் நீங்கள் நலமா திட்டத்தை செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு. பெ சாமிநாதன் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் இன்று நீங்கள் நலமா என்ற திட்ட மூலம் பொது மக்களிடம் நேரடியாக தொலைபேசி மூலம் கலந்துரையாடும் நிகழ்வினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் துவங்கி வைத்தார் இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் துவக்கி வைத்தார்.

இதில் மகளிர் உரிமைத் தொகை பெற்ற பெண்கள்,இலவச பேருந்து பயணம் செய்யும் பெண்கள் ,காலை சிற்றுண்டி உண்ணும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோரிடம் அமைச்சர் தொலைபேசி மூலம் திட்டம் குறித்தும் திட்டத்தின் பயன்கள் குறித்தும் முதல் கட்டமாக 7 நபரிடம் நீங்கள் நலமா மூலம்கேட்டறிந்தார்.இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அமைச்சருடன் இருந்தனர்

Tags

Next Story