அதிமுக நீர் மோர் பந்தல் திறப்பு

அதிமுக நீர் மோர் பந்தல் திறப்பு

நீர்மோர் பந்தல் திறப்பு

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், தற்போதைய குமாரபாளையம் எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், கரும்பு சாறு, தர்பூசணி பழங்கள், முலாம்பழங்கள், வெள்ளரிக்காய், ஆகியன வழங்கினார். தங்கமணியின் புதல்வர் தரணி, நகர துணை செயலர் திருநாவுக்கரசு, முன்னாள் நகர செயலர் குமணன், கவுன்சிலர்கள் புருஷோத்தமன், ரமேஷ்குமார், பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் முருகேசன், ரவி, அர்ச்சுனன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story