ஆடுதுறை பேரூராட்சியில் நீர்மோர் பந்தல்

ஆடுதுறை பேரூராட்சி பெருந்தலைவர் ம.க.ஸ்டாலின் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கினார்.
கோடை வெப்பம் வெளுத்து வாங்கும் நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்க ஆடுதுறை பேரூராட்சி சார்பில் தற்காலிக பேருந்து நிலையம், கடைவீதி மற்றும் மதுரகாளியம்மன் கோயில் பகுதிகளில் குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. ஆடுதுறை பேரூராட்சி பெருந்தலைவர் ம.க.ஸ்டாலின் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கினார். தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் வெளுத்து வாங்கி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் சார்பில் குடிநீர், மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் தற்காலிக பேருந்து நிலையம், கடைவீதி, மதுர காளியம்மன் கோவில் லிட்டர் மக்கள் கூடும் பகுதிகளில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் விதமாக ஆடுதுறை பேரூராட்சி சார்பில் நாள்தோறும் குடிநீர் நீர் மோர் உள்ளிட்டவைகள் வழங்க ஏதுவாக குடிநீர் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. ஆடுதுறை பேரூராட்சி பெருந்தலைவர் ம.க.ஸ்டாலின் குடிநீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் நீர்ச்சத்து பழங்கள் வழங்கினார்.

Tags

Next Story