திமுக சார்பில் நீட் ரத்து கையெழுத்து இயக்கம்

திமுக சார்பில் நீட் ரத்து  கையெழுத்து இயக்கம்

நீட் ரத்து கையெழுத்து இயக்கம்

சிவகங்கை திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி அதற்கு எதிரான நீட் விலக்கு நம் இலக்கு 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் என்ற அடிப்படையில் திமுக மாநில இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி ஆகியவற்றின் சார்பாக கையெழுத்த இயக்க நிகழ்ச்சியை திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை நகரில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகானி செந்தில்குமார் ஏற்பாட்டில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார்,மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து ,மாநில மாநில மாணவரணி மாணவரணி இணைச் செயலாளர் பூர்ண சங்கீதா ஆகியோர் முன்னிலையில் திமுக கொள்கை பரப்புச்செயலாளர் சபாபதி மோகன் கையெழுத்து இட்டு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கிவைத்தார்.

Tags

Next Story