நீட் விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கம்

நீட் விலக்கு நம் இலக்கு  கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம் 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வடக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக 'நீட் விலக்கு நம் இலக்கு' கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் துறையூர் சித்திரப்பட்டி பள்ளிவாசல் அருகே நடைபெற்றது , இதில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் ,மாவட்ட ஊராட்சி தலைவரும் கழக மாவட்ட பொருளாளருமான தர்மன் ராஜேந்திரன்,நகர கழக செயலாளர் ,மாவட்ட அறங்காவலர்கள் நியமன குழு தலைவர் மெடிக்கல் ந.முரளி,ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, ,மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் முகமது ரபீக் செய்திருந்தார்.

Tags

Next Story