ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அலட்சியம் - பறிபோன உயிர்

ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அலட்சியம் - பறிபோன உயிர்

உயிரிழந்தவர்

சாலைக்கிராமம் அருகே ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அலட்சியத்தால் ஒருவர் உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் அருகே உள்ள தெற்கு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். கட்டிட வேலை பார்க்கும் இவர் பணி முடித்து விட்டு மது அருந்திய நிலையில் தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது.

சின்னத்துகவூர் பேருந்து நிறுத்தம் அருகே வரும் போது மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கினார். விபத்தை பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் காயமடைந்த ரமேஷ்க்கு முதலுதவி செய்யாமல்,

இவர் மது போதையில் இருக்கிறார் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த ரமேஷ் உயிருக்கு போராடிய நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் இளையான்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் சுமார் ஒரு மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த அதே 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் இளையான்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் சுமார் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடிய ரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் ஓட்டுரின் அஜாக்கிரையால் ரமேஷ் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் இளையான்குடி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story