மாணவர்களுக்கு வாழ்த்து அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்

மாணவர்களுக்கு வாழ்த்து அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்
பைல் படம்
பொது தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.
பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முடிவுகள் இன்று (மே 6) வெளியாகி உள்ளது. இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பான மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், மேலும் தேர்ச்சி தவறவிட்ட மாணவர்கள் மீண்டும் முயற்சி செய்யவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story