நெல்லையப்பர் கோவிலில் செப்புத்தேர் வீதியுலா

நெல்லையப்பர் கோவிலில் செப்புத்தேர் வீதியுலா

நெல்லையப்பர் வீதி உலா 

திருவாதிரையை முன்னிட்டு நடைபெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் -காந்திமதியம்மன் திருக்கோயில் திருவாதிரை திருவிழாவையொட்டி செப்புத்தேர் வீதியுலா நேற்று நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சுவாமி கோயில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள வரலாற்று புகழ் வாய்ந்த தாமிரசபையில் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு திருநீராட்டு, சிறப்பு தீபாராதனை நேற்று இரவு முழுவதும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story