நெம்மகோட்டை சித்திவிநாயகர் கோயில் தேரோட்டம்
தேரோட்டத்தை கலந்து கொண்டவர்கள்
நெம்மகோட்டை சித்திவிநாயகர் கோயில் தேரோட்டம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டை சித்திவிநாயகர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. நெம்மகோட்டை சித்திவிநாயகர் கோயில் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,
சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் சித்திவிநாயகரை எழுந்தருளச் செய்து,
தேரோடும் வீதிகள் வழியே ஏராளமான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்ட விழாவில் ஆலங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். ஆலங்குடி போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
Next Story