ஆட்டோ திருடனுக்கு வலை வீச்சு

ஆட்டோ திருடனுக்கு வலை வீச்சு

ஆட்டோ திருட்டு 

வத்தலக்குண்டு பெத்தானியபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(31). இவர் திண்டுக்கல் சாலையில் பெத்தானியபுரம் அருகே ஆட்டோ ஓட்டிவந்தார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு இவர் வீட்டு முன்பு ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றார். காலையில் எழுந்து பார்த்தபோது ஆட்டோ மாயமானது. இது தொடர்பாக வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மதுரை சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஆட்டோவுக்கு பெட்ரோல் போடும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் சிக்கியது. அதை வைத்து போலீசார் ஆட்டோ திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story