நாமக்கல்: லோக்சபா தேர்தல் புகார் அளிக்க புதிய செயலி!

நாமக்கல்: லோக்சபா தேர்தல் புகார் அளிக்க புதிய செயலி!

மாவட்ட ஆட்சியர் 

சம்மந்தப்பட்ட பகுதியில் பணியில் ஈடுபட்டு இருக்கும் பறக்குபடையினருக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக நிகழ்விடத்திற்கு சென்று புகாரின் மீது உரிய நடவடிக்கை 100 நிமிடங்களுக்குள் மேற்கொள்ளப்படும்.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த புகார்களை தெரிவிக்க cVIGIL (citizen VIGIL) என்ற ஸ்மார்ட்போன் செயலியினை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை தேவைப்படுபவர்கள் தங்களது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்தல் விதிமுறைகள் குறித்து தாங்கள் ஏதேனும் விதிமீறல்களை பார்வையிட்டால் அதனை cVIGIL செயலியில் உள்ள பொத்தானை அழுத்தி புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவு செய்ய அதற்கான பொத்தானை அழுத்தும் போது நடைபெறும் நிகழ்வினை நேரடியாக பதிவு செய்து, பதிவேற்றம் செய்யவேண்டும். இந்த புகாரானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் cVIGIL கண்காணிப்பு குழுவினருக்கு புகார் தெரிவித்த இடத்தின் முழுவிவரத்தோடு கிடைக்க பெறும். அந்த புகாரானது சம்மந்தப்பட்ட பகுதியில் பணியில் ஈடுபட்டு இருக்கும் பறக்குபடையினருக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக நிகழ்விடத்திற்கு சென்று புகாரின் மீது உரிய நடவடிக்கை 100 நிமிடங்களுக்குள் மேற்கொள்ளப்படும்.மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளர், தலைமை தேர்தல் அலுவலர் ஆகியோர் இந்த செயலியின் மூலமே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயலியை பதிவிறக்கம் செய்யும்போதே தங்களது செல்பேசி எண்ணை பதிவு செய்திருந்தால் சம்மந்தப்பட்ட நபருக்கு தீர்வு ஸ்மார்ட் போனிலேயே வந்து சேரும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story