காங்கேயத்தில் நவீனரக புதிய பேருந்து; பயணிகள் மகிழ்ச்சி

காங்கேயத்தில் நவீனரக புதிய பேருந்து; பயணிகள் மகிழ்ச்சி

காங்கேயம் போக்குவரத்து பணிமனைக்கு நவீன ரக புதிய பேருந்து வழங்கப்பட்டதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

காங்கேயம் போக்குவரத்து பணிமனைக்கு நவீன ரக புதிய பேருந்து வழங்கப்பட்டதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் புதிய நவீன வசதிகளை கொண்ட பி.எஸ்.6 ரக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. காங்கேயம் பேருந்து பணிமனையில் இருந்து தினசரி காங்கேயம் முதல் திருப்பூர் வரையிலான வழித்தடத்தில் ஒரு‌ பேருந்தும், காங்கேயம்‌ முதல் பெருந்துறை உள்ள வழித்தடத்தில் ஒரு‌ பேருந்தும் இயக்கப்படுகிறது.

மேலும் காங்கேயம் முதல் திருப்பூர் வரை நாள் ஒன்றுக்கு 14 முறை சென்று வருவதாகவும், காங்கேயம் முதல் பெருந்துறை வரை நாள்‌ ஒன்றுக்கு 10 முறை சென்று வருவதாகவும், இந்த பேருந்துகளில் இதமான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் புகை வெளியிடாத ரக பேருந்துகளாக இயங்கும் என்றும், மேலும் வரும் காலங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் எனவும் பணிமனை அதிகாரி கௌதம் தெரிவித்தார்.

Tags

Next Story